உணவின் முக்கியத்துவம் இப்போது தான் உணர ஆரம்பிக்கிறது உலகம். உணவு, உடை, இருப்பிடம் மனித உலகின் அன்றாட தேவை. அதாவது பழங்காலம் முதல் இக்காலம் வரை மனிதனின் அன்றாட தேவைக்கான பொருளில் மாற்றம் உண்டாகியுள்ளதே தவிர அன்றாட தேவையில் எந்த மாற்றமும் இல்லை. பழங்காலத்தில் மர இலையும், காடும் தான் உடையும், இருப்பிடமுமாக இருந்து வந்தது. காலம் மாற மாற உடையும், இருப்பிடமும் நிராகரிக்க முடியாத தேவையாக மாறியுள்ளது காரணம் மனித இனத்தின் முன்னேற்றம். எக்காலமானாலும் ஒரு தேவை மட்டும் எந்த நிலையிலும் மாற்றமே இல்லாத தேவையாக இருப்பது உணவு. மனிதனுக்கும், உயிரினத்திற்கும் இருக்கும் வேறுபாட்டில் ஒன்று உணவு. அதாவது பழங்கால மனிதன் காடுகளில் வாழும்போது உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாதது போல மிருகங்களின் மாமிசமும், இலை தலைகளையுமே உண்டு வாழ்ந்து வந்தாம். காலம் மாற மாற, இயற்கை உணவை இயற்கையாக உருவாக்கி உண்ண ஆரம்பித்தான். இன்றும் இயற்கை உணவு இல்லையேல் ஏது இந்த பிரபஞ்சம்?
திங்கள், 24 ஜூலை, 2023
இந்தியாவில் உணவுப்பொருட்களின் விலை உயர்வு, உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமா?
உணவின் முக்கியத்துவம் இப்போது தான் உணர ஆரம்பிக்கிறது உலகம். உணவு, உடை, இருப்பிடம் மனித உலகின் அன்றாட தேவை. அதாவது பழங்காலம் முதல் இக்காலம் வரை மனிதனின் அன்றாட தேவைக்கான பொருளில் மாற்றம் உண்டாகியுள்ளதே தவிர அன்றாட தேவையில் எந்த மாற்றமும் இல்லை. பழங்காலத்தில் மர இலையும், காடும் தான் உடையும், இருப்பிடமுமாக இருந்து வந்தது. காலம் மாற மாற உடையும், இருப்பிடமும் நிராகரிக்க முடியாத தேவையாக மாறியுள்ளது காரணம் மனித இனத்தின் முன்னேற்றம். எக்காலமானாலும் ஒரு தேவை மட்டும் எந்த நிலையிலும் மாற்றமே இல்லாத தேவையாக இருப்பது உணவு. மனிதனுக்கும், உயிரினத்திற்கும் இருக்கும் வேறுபாட்டில் ஒன்று உணவு. அதாவது பழங்கால மனிதன் காடுகளில் வாழும்போது உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாதது போல மிருகங்களின் மாமிசமும், இலை தலைகளையுமே உண்டு வாழ்ந்து வந்தாம். காலம் மாற மாற, இயற்கை உணவை இயற்கையாக உருவாக்கி உண்ண ஆரம்பித்தான். இன்றும் இயற்கை உணவு இல்லையேல் ஏது இந்த பிரபஞ்சம்?
வெள்ளி, 21 ஜூலை, 2023
மணிப்பூரில் கசங்(க்)கிய பெண்மை😢
மணிப்பூரில் கசங்(க்)கிய பெண்மை😢
![]() |
பெண்ணானவள் யார் இவள்?
உருவத்தில் என்ன வித்தியாசம் கண்டாய்?
உள்ளத்தில் என்ன வேற்றுமை கண்டாய்?
உயிரை கொடுத்தவளின் உணர்வை கசக்கியவன் நீ ஆண் மகனா?
கங்கையாய் புனிதமானவளும் இங்கே தான்,
அப்புனிதத்தை அம்மணமாக்கியதும் இங்கேதான்,
நான் என்ற கர்வம்,
நடைபிணமாய் பெண்ணை வதைத்தது,
உடையை கிழித்து
தோழுரிந்த உடலாய்
தன்னவன் மட்டும் பார்க்கும் உடலை
தீய எண்ணம் கொண்டவன் புசித்திட செய்தாயே நீ ஆண்மகனா?
பச்சிழம் பசி போக்கிய மார்பகங்களை
வஞ்சகன் ருசி பார்த்திட செய்தாயே உன் தாயும் பெண்தானே?
அவள் யாராக இருந்தால் என்ன?
எந்த ஊராக இருந்தால் என்ன?
எந்த மதமாக இருந்தால் என்ன?
எந்த சாதியாக இருந்தால் என்ன?
அவளின் உணர்வு உன் தாயின் உணர்வுக்கு இணைதானடா...
இதற்கு பதில் அவள் உயிரை கொன்றிருக்கலாம்
அவள் உணர்வை வதைத்து
அவளை உயிரோடு விட்டாயே தினம் தினம் வாழ்ந்தே சாகவா???
உன் கைபட்ட தேகம்
ஆயிரம் ஆண் கண்பட்டு பாழாகியதே!
தவறில்லா அவள் மனதை
இனி தேற்றுவது எப்படி?
நீ தூக்கில் தொங்கினாலும்
தினம் தினம் உன் செயல் அவளை வதைத்து கொல்லுமே!
எதுவும் கடந்து யோசித்து என்ன பயன்?
எத்தனை எத்தனை பாவங்கள்?
அழுது அழுது இந்த புனிதமான பெண்மை கோழையாகிவிட்டதே!- என் வையகத்தில்,
உயிரை கடந்து உணர்வுகளை கொன்றவனை பெண் தெய்வமும் தண்டிக்குமா?
பெண் அவ்வளவுதான் அப்படித்தானே அந்த எண்ணம்?
சத்தமாய் அழவும் முடியாத சுதந்திரமற்ற உலகில்
பெண் வாழ தகுதியற்றவளா?
பின்பு எப்படி நீயும்? நானும்?
முட்டாள் உலகமே
அவள் இல்லாமல் இங்கு யாரும் இல்லை...
புரிந்து கொள்,
இல்லையேல் மடிந்து மாண்டுபோவாய்....
#யுவன்தமிழ்
உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்
2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...
-
உலகமே ஒரு நாள் இந்தியாவை திரும்பி பார்க்கும், உலகில் உள்ள அத்தனை துறைகளிலும் இந்தியனின் பங்கு மிக அதிகமாக இருக்கும், உலக ஒற்றுமையில் இந்தி...
-
காற்றுக்கு இசை உயிரூட்டிய கவிஞனே! மெல்லிசையில் மெட்டுக்கள் படித்த கலைஞனே! வார்த்தைகளில் உணர்வுகளை பதித்த இசைக் கடவுளே! கண் தேடிய காற்றுக்...
-
மனித பிறவி என்றால் மனதில் ஆயிரமாயிரம் குழப்பங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும் இந்த குழப்பம் பணம் , பதவி என்றெல்லாம் பாராது அனைத்து மனிதர...





.png)