ஞாயிறு, 25 அக்டோபர், 2020

வெற்றியும், ஓவியமும் முழுமையடையாமல் அழகாக இருக்காது🖌️💪🏻🥴💐🌱

 


வெற்றி என்பது அழகுதான்  வெற்றிக்கான வழிகளும் செயல்முறையும் அழகானது அல்ல!!!

வாழ்க்கையில் அடுத்தவர் வெற்றியை தள்ளி நின்று பார்க்கும் போது அழகாகத்தான் தெரிகிறது அனைவருக்கும், அந்த வெற்றியை அனைவரும் ஒரு எடுத்துக்காட்டாக வைத்து நாமும் நம் வாழ்வில் அவரைப்போன்றே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் இது மனித இயல்பு ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே அந்த வெற்றியாளன் அடைந்த வெற்றியோடு சேர்த்து அவர் அடைந்த இன்னல்கள், தோல்விகள் மற்றும் தடைகளையும் அதை கடந்து வந்த பாதையையும் பார்ப்பார்கள் அவர்களால் மட்டுமே வாழ்வில் விரைவில் வெற்றிபெற முடியும்... 

ஒரு நாட்டின் ராஜாவிற்கு ஓவியம் என்பது மிக விருப்பம் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டோடு நட்புறவையும் சேர்த்து அந்த நாட்டில் உள்ள விலை உயர்ந்த ஓவியங்களை தன் அரண்மனையில் சேர்த்து வைப்பது அவரது வழக்கம்.. அந்த ராஜாவிற்கு ஒரு யோசனை உலகிலே மிக அழகிய யாரும் எங்கும் பார்க்காத ஒரு ஓவியம் வரைந்து தன்னுடைய அரண்மனையில் மத்தியில் அனைவருக்கும் தெரியும் வகையில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் நாட்டில் ஒரு தலைச் சிறந்த ஓவியரை தன் அரண்மனைக்கு அழைத்து தன்னுடைய கற்பனைக்கு ஏற்ப ஒரு அழகிய ஓவியம் தன் அரண்மனையில் இடம்பெற வேண்டும் என்று கூறி அந்த ஓவியரை ஓவிய வரைய பணித்தார்., அந்த ஓவியரும் தன் ஓவியத்திற்கான இடத்தை தேர்வு செய்து முதல் கட்ட ஓவியப் பணியை ஆரம்பித்தார், நாட்கள் நகர்ந்தன அந்த ஓவியரும் ராஜாவின் கற்பனைக்கு ஏற்ப வரைந்து கொண்டிருந்தார் ஒரு சில வாரங்கள் கழித்து பார்வையிட சென்றார் தன் கற்பனைக்கு ஏற்ப ஓவியமாக அவருக்கு தெரியவில்லை மேலும் சில வாரங்கள் கழித்து மீண்டும் பார்வையிட சென்றார் அப்போதும் ராஜாவிற்கு அந்த ஓவியர் வரையும் ஓவியம் தன் கற்பனைக்கு ஒன்றியதாக இல்லை அதனால் மூன்றாம் முறை மீண்டும் பார்வைக்கு சென்று ஓவியத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் அந்த ஓவியரை தன் அரண்மனைக்கு அழைத்து பேசினார்., ஓவியரே நீங்கள் வரையும் ஓவியம் என்னுடைய கற்பனைக்கு ஏற்ப இன்னும் அமையவில்லை, உங்களின் ஓவிய பயிற்சிக்கு நான் என் நேரத்தையும், பணத்தையும் செலவிட விரும்பவில்லை என்று கூறி நீங்கள் எனக்காக ஓவியம் வரைவதை நிறுத்திவிடுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார். 



சில ஆண்டுகள் கழிந்தது ராஜாவின் எதிர்பார்ப்பு ஓவியம் அவருக்கு கிடைக்கவே இல்லை எனவே நட்பு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற ராஜா அந்த நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை காண விரும்பி அங்கு சென்றார், அந்த கண்காட்சிக்கும் சென்ற உடனே கண்காட்சியின் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஓவியம் ராஜாவின் கண்ணில் பட்டதும் ராஜா அந்த ஓவியம் வரைந்த ஓவியரை அழைத்து வாருங்கள் என்றார் அந்த ஓவியரும் வந்தார் இவரைப்பார்த்து ராஜா நீங்கள் தான் இந்த ஓவியம் வரைந்தவரா??? மிகச்சிறப்பாக ஓவியம் வரைய கற்றுக்கொண்டீர்கள் போல என்று கூறினார்., அந்த ஓவியர் வேறு யாரும் இல்லை ராஜாவின் கற்பனையை வரைய ஆரம்பித்து ராஜாவால் நிராகரிக்கப்பட்ட ஓவியர் தான் அவர்.,

அந்த ஓவியரோ ராஜா இந்த ஓவியரை நன்றாக பாருங்கள் இந்த ஓவியம் எங்கோ பார்த்தது போல இல்லையா என்றார், இந்த ஓவியம் உங்களுக்காக வரைய ஆரம்பித்தது தான் ராஜா இந்த ஓவியம் முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது மேலும் இந்த ஓவியம் பல நாடுகளில் கண்காட்சிகளில் பங்கு பெற்று சிறப்பு வாய்ந்த ஓவியம் என்றார்... இந்த ஓவியம் உங்களுக்காக வரைந்த ஓவியம் தான் ராஜா என்றார்.

ராஜாவின் மனதில் ஏமாற்றத்தோடு சந்தோசமும் கொண்டு அந்த ஓவியத்தை வாங்கிச் சென்றார், அந்த ஓவியம் ராஜாவால் முழுமையடையாமல் நிராகரிக்கப்பட்ட போது ஓவியர் மிகுந்த மன உளைச்சலோடு அமர்ந்திருந்தபோது அந்த ஓவியம் ஓவியரைப்பார்த்து நான் உன்னால் ஆரம்பிக்கப்பட்டவன் நீ என்னை பாதியில் விட்டுவிட்டால் நான் முழுமையடைய மாட்டேன், என் முழுமையால் உன் வெற்றி நிச்சயம் பாராட்டப்படும் என்று கூறியதாக எண்ணி இந்த ஓவியத்தை இரண்டு ஆண்டுகள் முயற்சியில் முடித்ததாக ராஜாவிடம் கூறினார் அந்த ஓவியர் இறுதியில் ராஜாவின் கற்பனை ஓவியம் அதே ஓவியரால் முழுமையடைந்து அரண்மனையில் மீண்டும் இடம் பெற்றது அந்த ஓவியம்...


வெற்றி என்பது முழுமையடைந்த ஓவியம் போல பார்க்க அழகாகத்தான் இருக்கும் ஆனால் வெற்றிக்கான முயற்சியும் அதன் செயல்பாடுகள் பார்க்க அழகானதாக இருக்காது, மன உளைச்சலைக் கொடுக்கும், மனம் தளர்ந்தால் வெற்றிக்கான பாதை மறைக்கப்படும், மனம் என்பதே வழி அந்த வழியினை சரியாக மேற்கொண்டால் நிச்சயம் நினைத்த இடத்தை அடைய முடியும் என்பது தான் ஒரு ஓவியத்தின் வெற்றி...  வெற்றியை மட்டுமே அழகாக பார்த்தும் அதன் பாதையில் இருக்கும் வலிகளையும், வேதனைகளையும் அழகாகவே இருக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம்...🌱👍💪🏻

வியாழன், 15 அக்டோபர், 2020

"அறிவியல் வித்தகனின் உலக கனவு"🇮🇳🇮🇳🇮🇳👍🙏💐🌱

 

உலகமே ஒரு நாள் இந்தியாவை திரும்பி பார்க்கும், உலகில் உள்ள அத்தனை துறைகளிலும் இந்தியனின் பங்கு மிக அதிகமாக இருக்கும், உலக ஒற்றுமையில் இந்தியா ஒரு மாபெரும் புள்ளியாக விளங்கும், உலகம் சார்ந்த முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்கு பல மடங்காகும், கல்வி, மருத்துவம், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உலகளவில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்து உலக அளவில் வல்லரசான ஒரு அதிசக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகும் 
இவை எல்லாம் கதைகள் அல்ல தான் பிறந்த நாட்டை இப்படி எல்லாம் ஒரு உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு தன் பிறப்பின் பொறுப்பை உணர்ந்து தான்னால் முடிந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட துறையில் உலகளவில் இந்தியாவின் தரத்தை உயர்த்திய ஒரு மாமனிதர்,இந்திய அறிவியலின் தந்தை முன்னால் குடியரசு தலைவர் ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகள்..
ஒவ்வொரு குடிமகனும் கனவு காண வேண்டும் என்பதை வலியுறுத்திய தலைவர்,

"கனவு என்பது உறங்கும் போது வருவதல்ல எந்த ஒரு செயல் உன்னை உறங்கவிடாது செய்து முடிக்க தோன்றுகிறதோ அதுவே உண்மையான கனவு"என்று கனவின் அர்த்தத்தை இந்திய இளைஞர்களின் மனதில் பதித்த ஒரு மாமனிதர்...



உலகை வெல்ல வேண்டும் என்பதல்ல நோக்கம் உலகில் ஒரு வெற்றியாளனாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.,

மாணவர்கள் தான் நம் நாட்டின் முதுகெழும்பு, அவர்களை நல்வழிப்படுத்தி நம் நாட்டிற்காக சிந்திக்க முற்பட்ட ஒரு ஈடுஇணையில்லா ஆசிரியர்...

சாதிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரின் மனதிலும் எடுத்துக்காட்டு வாழ்க்கை வாழ்ந்து சென்ற ஒரு சாதனையாளன்..

மாணவர்களின் சிந்தனைகளை தன் வாழ்க்கையால் செதுக்கிய சிற்பி இவர்

இவருடைய கனவு இந்தியா 2020 ஆம் ஆண்டு வல்லரசாகும் அன்றைய அரசியல், மற்றும் பொருளாதரத்தை வைத்து அன்றே கனவு கானத் தொடங்கிவிட்டார் அப்துல் கலாம் ஐயா..



அவருடைய கனவு எப்போது நிறைவேறும்??? ஒரு சமுதாயம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கூட்டமைப்பே, இந்த சமுதாயத்தில் எல்லோரும் ஒரே சிந்தனைகளை கொண்டிருப்பதில்லை ஒவ்வொரு மனிதனுக்கு ஏற்ப அவனுடைய தேவைகளுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடுகிறது

அப்துல் கலாம் ஐயா அன்றே கூறிய சில முக்கிய வார்த்தைகள் நமக்கு மறந்திருக்கலாம் ஒரு சமுதாய முன்னேற்றம் என்பது ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை வைத்து ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் இருக்கும் திறமையை வெளி கொண்டுவர ஒவ்வொருவரையும் கனவு காணுங்கள் என்று அறிவுறுத்தினார்...

அரசியல், பணம், தகுதி இவை எல்லாம் சரியான திறமை வாய்ந்தனை நிச்சயம் பாதிக்கும் என்று அன்றே வெளி உலகிற்கு எடுத்துகூறியவர் அப்துல் கலாம் ஐயா

அவருடைய இழப்பு இல்லை என்றால் நம் நாடு வல்லரசு ஆயிருக்குமா என்று தெரியாது அடுத்த தலைமுறையின் கனவு நிச்சயம் நிறைவேறி இருக்கும்.,




நமக்குள் இருந்த ஒரு உள்ளுணர்வை தட்டி எழுப்பிவிட்டவரின் கனவை அடுத்த தலைமுறையினரை முன்னேற்றிவிட்டு நம் நாட்டினை அடுத்த தலைமுறையிலாவது வல்லரசாக்கிக் காட்டுவோம் என்று ஐயா அவர்களின் பிறந்தநாளான இன்று சபதம் ஏற்போம்

ஒரு தனிப்பட்ட மனிதனின் வளர்ச்சி அவனுடைய திறமையையும், முயற்சியையும் சார்ந்தே இருக்க வேண்டுமே தவிர பணமோ , அரசியலை சார்ந்ததாக இருக்க கூடாது... ஒருவனுடைய உயர்வு மட்டுமே சமுதாய உயர்வை கொடுத்திடாது 
ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியும் தான் ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அடித்தளம்...

நாமும் முன்னேறுவோம் நம்மை சார்ந்தவர்களையும் முன்னேற்றுவோம் இதுவரை இல்லை என்றாலும் இனியாவது

ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவு அவர் ஒருவரை மட்டுமே சார்ந்தது அல்ல ஒவ்வொரு இந்தியனையும் சார்ந்தது , இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பதை அடுத்த தலைமுறையிலாவது நிறைவேற்றுவோம் 
நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அதற்கான சூழலையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுப்போம்
ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியே நம் இந்தியாவின் வளர்ச்சி என்று உலகிற்கு காட்டுவோம் அதுவே நம் லட்சியம்... 
வாழ்வோம் இந்தியனாக 
வளர்வோம் இந்திய குடிமகனாக!!! ஜெய்ஹிந்த்🇮🇳💐💐🌱🙏👍


திங்கள், 12 அக்டோபர், 2020

யுவியின் கவியில் சில வார்த்தைகள்😎🌹



கண்ணாடி கண்ணுக்குள் இரண்டு விழி வைத்து

அந்த விழிகளிலே அவளின் மொழி வைத்து

என்னோடு பேசிய காதல் வசனங்கள் என்னுள் அவளின் நினைவை மூழ்கச்செய்து

நான் காதல் கவிதை எழுதச்செய்து

என் காதலை அவளுக்கு விளக்கச்செய்து 

காதலோடு காதலை எதிர்பார்க்கச்செய்து 

அவள் சொல்வாளா காதலை அல்லது கொல்வாளா என் காதலை என்று ஏங்கச்செய்து 

ஒற்றை கண் சிமிட்டலில் உணரச்செய்து காதலை சொல்லிச்சென்றவள் என் காதலி 

அன்பே என்று எழுத ஆரம்பித்து பல கோடி வார்த்தைகள் உவமை கொடுத்தவளின் அழகை, புன்னகையை, காதலை எழுதி என் எதிர்காலமவளோடு என்று நினைத்து நினைத்து மனம் உறுகி உறுகி காதலித்தேன் அவளை 

என் காதல் கவியே என்னோடு சேர்வாயாக என் உயிரை எடுத்து உன் நினைவுகளை என்னுள் புதைத்து காத்திருக்கிறேனடி ஆருயிரே காதல் செய்வாயா????😍🌹💐

யுவன் தமிழ்




ஞாயிறு, 11 அக்டோபர், 2020

Daughter's Love- மகளின் அப்பா (இழந்துவிட்ட உயிரோவியம்)🖋️💐

 

உலகில் தாய்க்கு நிகர் எவருமில்லை 

என் தாயின் வயிற்றின் ஈரைந்து மாதம் 

பொக்கிசமான காலங்கள் எல்லாம் அவள் என்னைச் சுமந்தாள் 

தாயின் அரவணைப்பு மட்டும் சூழ்ந்த ஒரு சில காலம் 

நான் யாரென புரியும் வரை அன்பு என்பது ஒரு தேவையாகவே உணர்ந்தேன் 

நான் என்னை உணர்ந்த நாள் முதல் 

தந்தையும் தாயும் ஒன்றென அன்பை அனுபவித்து வாழ்ந்தேன் சில காலம் 

எல்லாம் நல்ல நாட்களாக சிரிந்து வாழ்ந்த நான் 

அழுகையின் போது உடல் விலியை மட்டுமே உணர்ந்திருந்திருந்தேன்

நாட்கள் நன்றாக நகர்ந்தன

இறைவனின் சாபம் போன்றொரு நிமிடங்கள்

எதிர்பாராத சூழ்நிலை 

இழப்பு என்றால் ஒட்டு மொத்த வாழ்க்கையும் இழப்பான நாள் அது 

அப்பா நீங்கள் இறந்தாக வந்த செய்தி

உலகமே வெறுமையான நிமிடங்கள்

இறப்பை தேடிய நிமிடங்கள் 

வலிகளால் மனம் நிறைந்த நிமிடங்கள் 

அன்பு மொத்தமும் ஆவியான நிமிடங்கள்

தனிமை என்று சிறையால் அடைபட்ட நிமிடங்கள் 

யார் உடன் நின்றார் 

யார் விட்டு சென்றார் என்று புரியாத நிமிடங்கள் 

அத்தோடு சாவை தேடிய நிமிடங்கள் 

தேடித் தேடி பார்த்தும் என்னுலகில் என் வாழ்வை தொலைத்த நிமிடங்கள் 

உறவுகள் எல்லாம் பொய்த்த நிமிடங்கள் 

ஒரே ஒரு உயிர் இழப்பு 

என் உலகையே ஆட்டிப்படைத்த நிமிடங்கள்

என் எதிரிக்கும் வரக்கூடாத நிமிடங்கள் அது 

என்னைச்சுமந்த இரண்டு உயிரில் ஓருயிரை காணாமல் தவித்த நிமிடங்கள் 

தந்தை பாசம் அன்றோடு என்னை விட்டு விலகிய நிமிடங்கள் 

ஆயிரம் யானைவந்தாலும் என் தந்தை இருக்க நான் அஞ்சேன் என நினைத்தேன் 

ஆயிரம் யானைகளால் மிதிபட்ட வலியை உணர்ந்தேன் உம் இழப்பால் 

சொந்தங்கள் என்று கூறிய உறவுகள் முன் பாவப்பட்டு நிற்கும் வாழ்க்கை வாழ்த்தொடங்கினோம் நாங்கள் 

ஓருயிரை இழந்த மூன்று உயிரும் அனாதையானோம் , உறவுகள் இருந்தும் 

மனவலியை விட கொடியதில்லை இவ்வுலகில் - என அனுபவித்து வாழ்கிறோம் ஒவ்வொரு நாளும் 

நீயில்லா உலகம் எங்களுக்கு எதிரானதாக உணர்கிறோம் ஒவ்வொரு நிமிடமும்

எத்தனை அன்பு புதிதென வந்தாலும் தந்தைக்கு இணையாக எதுவும் ஆகாதென்பதை உணர்ந்தோம் 

நீ இல்லா ஒவ்வொரு வருடமும் புதிதாக பிறக்கையில் உம்மை விட்டு தொலைவாக செல்கிறேன் நான் 

எங்கு சென்றாலும் மனதில் உன் நினைவுகளால் என் கண்களில் கண்ணீர் கசிகிறது அப்பா 

வலியால் இந்த வார்த்தைகளை கொட்டுகிறேன் 

இப்பிறவியில் சாத்தியம் என்றால் மீண்டும் வா என் பிள்ளையாக

உன்னை பார்க்க 

உன்னை சுமக்க 

உன்னை நேசிக்க 

உன்னை சுவாசிக்க 

எத்தனை வலியானாலும் கடவுளிடம் பிச்சை கேட்கிறேன் என் கடவுளை திருப்பிக்கொடு என்று என் குழந்தையாக.,

மீண்டு வா அப்பா!!!

மீண்டும் வா அப்பா!!!

உனக்காக காத்திருக்கிறேன்!!!

உன்னைச் சுமக்க!!!🌱😢💐🙏

வெள்ளி, 2 அக்டோபர், 2020

குழப்பமற்ற சுயமுடிவு சுமையாக இருந்தாலும் சுகமாக இருக்கும்💐🌱👍

 


மனித பிறவி என்றால் மனதில் ஆயிரமாயிரம் குழப்பங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும் இந்த குழப்பம் பணம் , பதவி என்றெல்லாம் பாராது அனைத்து மனிதர்களுக்கும் ஒரு சில எதிர்பார்ப்புகள், கடமைகள், ஆசைகள் இப்படி அவர்களின் தேவையை வைத்து மனதில் குழப்பமானது எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த குழப்பம் "நம்மிடையே இருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடே என்பது பல முன்னோர்களின் கருத்து" 


சரி நம் எண்ணத்திற்கும் குழப்பத்திற்கும் என்ன சம்பந்தம்?? அடுத்த கேள்வி நல்லதை எண்ணினால் நல்லது நடக்கும் கெட்டதை எண்ணினால் கெட்டது நடக்கும் இதில் என்ன குழப்பங்கள் வேண்டி இருக்கு??? அந்த எண்ணங்களின் நோக்கம் தான் மனதில் ஒரு விதமான குழப்பத்தை விதைப்பது... 

பணம் இல்லாதவருக்கு பணம் சம்பாதிப்பது எப்படி என்று முடிவெடிப்பதில் குழப்பம், பணம் இருப்பவர்கள் அந்த பணத்தை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் குழப்பம்...

அடுத்தவர் வாழ்க்கை நன்றாக உள்ளது நம் வாழ்க்கை எப்போது அப்படி மாறும் என்ற குழப்பம்,

அதற்கு தகுந்த முடிவெடுப்பதில் குழப்பம்.,


படிக்கும் போது படிப்பதை தேர்ந்தெடுப்பதில் குழப்பம்,

அப்படி தெர்வு செய்துவிட்டால் முன்னேற்றம் வருமா என்ற குழப்பம்,

பக்கத்து வீட்டுகாரன் சந்தோசமாக இருந்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் முதல் இன்று நடக்கும் கிரிக்கெட்டில் யார் வெல்லப்போகிறார் என்ற குழப்பம்  வரை ஆயரமாயிரம் இத்தனை குழப்பத்திலும் நாம் சரியான பாதையில் செல்ல சரியான நேரத்தில் முடிவெடுக்க வேண்டும்..

எதிர்கால நோக்கம் சரியாக இருக்க வேண்டும்... இதற்கான வழி தெரியாமல் தான் பலருடைய வாழ்க்கை தடம் மாறிச்செல்கிறது, ஒரு சிலரது வாழ்க்கை அர்த்தம் இல்லாமல் வாழ்வது கடமைக்காக என்பது போல செல்கிறது.



என்ன பிரச்சனை என்றே தெரியாது ஆனால் சோர்வாக இருப்பார்கள், மனதில் நாளை எப்படி இருக்கப்போகிறது என்ற குழப்பம், ஒரு சிந்தனை மனதில் தோன்றும்போது அது சரியாக இருக்கும் என்று எண்ணுவதை விட அது தவறாகி விடும் என்ற எதிர்மறை எண்ணம் ஆயிரம் மடங்கு மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்...அந்த எதிர்மறை எண்ணங்களால் உருவாகுவதே இந்த குழப்பம்... நம் வாழ்க்கையை நம்மைதவிர வேறு யாரும் வாழப்போவதில்லை., நம் வாழ்க்கையில் நம்மைத் தவிர வேறு யாரும் பொறுப்பேற்பதில்லை.., அருகில் இருப்பவனை ஒரு போதும் நம்பாதே!! அவர்களுல் சிலர் துரோகிகளாக வலம் வந்துகொண்டிருப்பார்கள்., ஆயிரம் நல்லவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் ஒரு துரோகியை கூட உடன் வைத்திருக்ககூடாது என்பதில் பல மடங்கு சிந்தித்து செயல்பட வேண்டும்., எப்படியோ நம் மனதின் குழப்பங்கள் நம் எண்ணங்களையும் அதற்கு ஏற்ப எடுக்கும்

 முடிவையும் மையமாகக் கொண்டது., சூழ்நிலைகள் இந்த நிலைப்பட்டிற்கு நிச்சயம் எதிர்ப்பாகத் தானே இருக்கும், சூழ்நிலைக்கு ஏற்ப நம் எண்ணங்களை மாற்ற முயற்சிக்காமல் எண்ணங்களின் செயல்பாடுகளில் மாற்றங்களை கொடுத்தால் எண்ணங்களும் நிறைவேறும், நம் முடிவும் குழப்பம் இல்லாத நிலையான முடிவாக இருக்கும்... 



ஒரு குரு மரத்தின் அடியில் அமர்ந்து தன் சீடர்களுக்கு வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொண்டிருந்தார் அப்போது அவருடைய சீடர் ஒருவர் எழுந்து குருவே எனக்கு ஒரு வினா எழுகிறது கேட்கறேன் என்றார் அதற்கு அந்த குரு சரி கேளுங்கள் என்று கூற சீடனோ நான் என் வாழ்வில் எல்லா நேரங்களிலும் சரியான முடிவை எடுக்கிறேனா? என்பதில் சந்தேகம் மற்றும் என் முடிவு பற்றிய குழப்பங்கள் எப்போதும் என்னை சரியான ஒரு நிலைப்பாட்டை விட்டு தள்ளிவைக்கிறது, மனம் எப்போது குழப்பமான நிலையிலே ஒரு நிம்மதி இல்லாத நிலையாக உணர்கிறேன் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றார். அதற்கு குரு நாம் அமர்ந்திருக்கும் இடத்தின் அருகில் ஒரு குளம் இருக்கிறது அதன் நிலை இப்போது எந்தவித கலங்களும் இன்றி தெளிவாக இருக்கிறது அதன் அடியில் இருக்கும் மண்ணைக்கூட நாம் தெளிவாகப் பார்க்க முடிகிறது இல்லையா இது தான் உங்கள் மனம் எப்போதும் தெளிவாக இருக்கும் என்பது உறுதியல்ல., அதனருகில் அவர் சென்று ஒரு பெரிய கல்லை தூக்கி உள்ளே வீசினார் உடனே அந்த குளத்தில் இருந்த நீர் முழுவதும் கலங்கி ஒரு தெளிவான நீரைக் காட்டிலும் நன்றாக கலங்கி இருந்தது அப்போது அந்த குரு கூறினார் இந்த குளத்தில் உள்ள கலங்கல்கள் எதையும் நான் நினைத்தாலோ அல்லது பிறர் நினைத்தாலோ தெளிவு படுத்த முடியாது அந்த குளத்தைத் தவிர அதேப்போலத் தான் உன் மனமும் தேவை இல்லாத ஏதோ ஒரு சில செயல்களால் கலங்கி குழப்பத்தோடு இருக்கும் மனதை தெளிவுபடுத்த உன்னைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதை உணர்ந்து சிந்தித்து செயல்படு என்று கூறினார் அந்த குரு... 



குழப்பங்கள் என்பது தேவையான விஷயத்தை பற்றி தேவை இல்லாத கோணத்தில் சிந்திப்பது தான் அதற்கு நம்மைத் தவிர வேறு யாராலும் நம் மனதில் இருக்கும் குழப்பத்திற்கும் தீர்வு சொல்ல முடியாது.. பிறரால் உன் மனம் குழப்பத்தை தீர்ப்பது என்பது கலங்கிய நீரை சுத்தம் செய்வது போல ஆழம் இறங்க இறங்க குழம்பிக் கொண்டே தான் இருக்கும் என்பதை உணர்ந்தால் நிச்சயம் பிறர் முடிவை நாடாமல் நம் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.,

"எண்ணம் போல் வாழ்க்கை"

எண்ணம் பற்றிய குழப்பம் கொள்ளாமல் எண்ணிய நல்லனவற்றை நல்ல முறையிலே செயல்படுத்தினால் வாழ்க்கை நல் வழியில் செல்லும்...

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...