புதன், 23 செப்டம்பர், 2020

உயிருக்கும்,உணர்வுக்கும் மதிப்பளிப்பது தான் மனித நேயம்👍Give the respect to third gender🙏💐

 


மூன்றாம் பால்


"உலகம் ஒரு வட்டம்"

    மனிதன் அனுபவத்தால் சொல்லும் சொல் இதில் உண்மை அல்லது பொய் என்பது அறிவியலின் உண்மையால் மட்டுமே உணர முடியும்… இந்த உலகில் படைப்புகள் ஏராளம் குறிப்பாக மனிதன், விலங்குகள் என அறிவை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தி வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்., ஐந்தறிவு உயிர் விலங்காகவும் ஆறறிவும் உயிர் மனிதனாகவும் வகைப்படுத்தி உலகம் மிக விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.. மனிதாக இருந்தாலும் அல்லது விலங்காக இருந்தாலும் சரி ஆண்பால் மற்றும் பெண்பால் என்று இருவகை பாலினம் உலகில் உருவாக்கி உயிர் பிறப்பிற்கு இவ்விரு பாலினமும் முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. 


ஆனால் ஏதோ ஒரு விஷயம் கவனிக்க மறுக்கிறது இந்த சமூகம் இரு பாலினங்களுக்கு இடையே இன்னொரு பாலினம் பிறந்து இவ்வுலகில் இழக்கக் கூடாதவையெல்லாம் இழந்து அவர்களுக்கு துணை அவர்கள் மட்டுமே என்ற ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாற்றம் மட்டுமே மாறாதது உலகம் அறிந்த உண்மை இது ஆனால் மாற்றம் கொண்ட மனிதர்களை வெறுத்து ஒதுக்குவதும், அவர்களை தள்ளிவைப்பதுவும், அவர்களுக்கு இவ்வுலகில் இடம் இல்லை என்பது போல பாவிப்பதுவும் ஏன் என்று தான் புரியவில்லை… எல்லாம் சரியாக அமைந்துவிட்டால் அது பொக்கிஷம் ஆனால் ஏதாவது மாற்றம் வந்துவிட்டால் அது தேவை இல்லாதது என்பது போல பாவித்து மூன்றாம் பாலினத்தவர்களை வெறுப்பது ஏன்?? அவர்கள் தீண்டத்தகாதவர்களா???  இல்லை நம் உரிமைகளை பறிக்க வந்தவர்களா??? எதுவும் இல்லை ஆனால் நம் ஆண் பெண் சமூகம் காணாததை எதையோ கண்டது போல அவர்களை தள்ளிவைப்பது ஏன்??? ஒரு மனிதனுக்கு அரவணைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரை நிச்சயம் வேண்டும் ஆனால் இவர்கள் திருநங்கை என உடளலவிலும் உள்ளத்திலும், மாற்றம் கண்ட உடனே அவர்களை முதலில் வெறுத்து ஒதுக்குவது இந்த சமுதாயத்தில் அவர்களை பெற்ற பெற்றோர்கள் தான் காரணம் இந்த சமுதாயம் அவர்களை இழிவாக பேசுமாம், இப்படிப்பட்ட குழந்தையை பெற்றுவிட்டோம் என்று...ஆயிரத்தில் ஒருவரோ அல்லது இருவரோ தான் திருநங்கை என்று தெரிந்ததும் அவர்கள் குடும்பம் ஆதரிப்பது… ஏனையோர் இந்த சமுதாய பேச்சுகளுக்கு பயந்து தன் குடும்பத்தை விட்டு விலகி வாழ்கிறார்கள்… அவர்கள் சாவது வரையிலுமே அவர்களை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை அவர்கள் குடும்பம்… பெற்ற பிள்ளைகளை இறந்துவிட்டதாக கூறி காரியம் செய்த பெற்றோர்களும் இந்த நாட்டில் வாழத்தான் செய்கிறார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை பெண்களை அடக்கி ஆண்ட சமுதாயம் தானே இது இன்றைய 20 ஆம் நூற்றாண்டில் தான் ஓரளவு முன்னேற்றம் வந்தது… அந்த முன்னேற்றம்  வளர ஆரம்பித்த உடனே பெண்கள் மீதான உடளலவிலும் மனதளவிலும் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்., அவர்களுக்கே அந்த நிலை என்றால் திருநங்கைகளின் நிலை சொல்லவே வேண்டாம்…

சரி அவர்களிடம் அப்படி என்னத்தான் தவறை கண்டோம் நாம்??? ஆணாக பிறந்தவர்கள் பெண்ணாக மாறுவது தவறு 

அவர்களின் அந்த மாற்றத்திற்கு காரணம் யார் என்று தெரியுமா? நமக்கு.,

அவர்களே அறியாத இந்த உடல் மாற்றம் மனதளவிலும், உடலளவிலும் தான் ஒரு பெண்ணாக தன்னை பாவித்தது அவர்களின் உயிரணு மாற்றம் இதனால் அவர்களை ஒதுக்குவதில் எந்த நன்மையும் இல்லை…

அவர்களை தீண்டத்தகாதவர்களாக நினைத்து அவர்களை குடும்பத்திலிருந்து வெறுத்து அவர்கள் வாழ்வதே ஒரு சாபம் என்று அவர்கள் எண்ணும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்…

மனிதனிடம் இருக்கும் குணங்களில் முக்கியம் போராட்டக்குணம்.,



இந்த போராட்டக்குணம் ஆண் மற்றும் பெண்களை விட திருநங்கைகளுக்குத் தான் அதிகம் உண்டு என்பதை நாம் இன்றும் அறிவதில்லை..

அவர்களுக்கென சில சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளது இந்த நூற்றாண்டில் கல்வி உரிமை முதல் அரசு வேலை வரை அவர்களுக்கும் தனியிடம் கொடுத்து அவர்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது அரசு… அவர்கள் ஆண் மற்றும் பெண் பாலினம் போல ஆசைகளும், கனவுகளும், அன்பும், அக்கறையும் கொண்டவரகள் தான்… அவர்களுக்கென உரிமைகள் மற்றும் தேவைகள் மறுக்கப்பட்டதாலே அவர்கள் சாலையில் காசுக்காக போராடும் நிலை உருவாகியுள்ளது… 


அவர்களின் இந்த நிலைக்கு காரணம் நம் சமுதாயம் மட்டுமே என்றால் அது மிகையகாது… 

இன்றைய நூற்றாண்டில் தான் மூன்றாம் பாலினத்தவருக்கான சில உரிமைகள் வழங்கப்படுவதாக இருந்தாலும் மனதளவில் அவர்களுக்கு இடையூறுகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது இந்த சமுதாயம். 



முதல் திருநங்கை SI பிரத்திகா யாஷினி அவர்களுடைய விண்ணப்பம் முதலில் அரசாலே நிராகரிக்கப்பட்டது காரணம் மூன்றாம் பாலினத்தவர் என்பதனால்., அதன்பிறகு அதன் மேல் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் மூன்றாம் பாலினத்தவரின் தேவைகளுக்கும் முயற்சிகளுக்கும் நிச்சயம் அரசு உதவ வேண்டும் என்று கூறி அவரின் விண்ணப்பம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது… அதன்பிறகு அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்று இறுதியில் சென்னையின் ஒரு முக்கிய பகுதியில் SI ஆக வெற்றி பெற்று சாதித்துக்காட்டியுள்ளார் அவர்.. அவருடைய இந்த வெற்றி தான் தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு கிடைத்த முதல் வெற்றியாகவும், இனி அவர்களுடய வாழ்க்கை மேலும் வளரும் என நம்பிக்கையூட்டியது… 

திருநங்கைகளும் மனிதர்கள் தான் 

அவர்களுக்கென வலி, அன்பு, உணர்வுகள் எல்லாம் நம்மைப்போலவே என்றுணர வேண்டும்… அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்!!!

அவர்களின் உண்மையான போராட்டத்திற்கு மதிப்பளிப்போம்!!!

1 கருத்து:

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...