ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

S P B நினைவலைகள் 💐🙏🌱😞

 


காற்றுக்கு இசை உயிரூட்டிய கவிஞனே!


மெல்லிசையில் மெட்டுக்கள் படித்த கலைஞனே!


வார்த்தைகளில் உணர்வுகளை பதித்த இசைக் கடவுளே!


கண் தேடிய காற்றுக்கு உயிரூட்டி செவி கொணர்ந்த கவியின் தாயே!


இசை மழை எங்கே பொழிந்தாலும் உன் குரல் இல்லா இடமும் காற்று புகாத இடம் மட்டுமே!


ஆயிரமாயிரம் குரல் படைப்புகள்!


பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு பாட்டிலும் உந்தன் குரல் ஒலிக்க

அதில் எம்மக்கள் மூழ்கி முக்குளிக்க., 


சிரிப்பு முதல் அழுகை வரை ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு படைப்புகளை பாட்டாய் பாடிய குரல் எங்கே இப்போது???


அடியேன் நான் சொக்கிச் சொக்கி உந்தன் குரலால் கைதானேன்!


எத்தனை வயது கடந்தாலும் 

அத்தனை கம்பீரம் உந்தன் குரலிலே.,


பல குரல் மன்னர்களும் எட்டாத உயரத்தை 

ஒற்றைக் குரலால் நீ அடைந்தாயே., 


நான்கு தலைமுறைக்கும் ஏற்ப ஆயிரமாயிரம் படைப்புகளை பொக்கிஷமாய் இவ்வுலகிற்கு கொடுத்த

நீயும் பொக்கிஷமாய் இம்மண்ணிற்குள் பதிக்கப்பட்டுவிட்டாய்!! 


உம் பாடல் கேட்டு குளிர்ந்த என் நெஞ்சம் 

நீயில்லை இனி என்றதும் உறைந்து உடையாப் பனியாக பயனற்றுப்போனதே!


தேகம் பிரிந்த ஆன்மா ஒன்று 

அத்தனை மக்களுக்கும் தாலாட்டு பாட இறைவன் பாதையடி சேர்ந்தது இப்போது!!!


உயிர் இல்லா தேகம் மறைந்தாலும்

உணர்வுள்ள உன் உயிர் பாடல்கள்

காற்றாய் ஒவ்வொரு உயிரோடும் சேர்ந்தே கிடக்கும்

இந்த இசை உலகம் உள்ளவரை!!!


துணிந்தவனுக்கு பாதையில் தடைகள் இல்லை!

எழுந்தவனுக்கு காலம் ஒரு பொருட்டல்ல 

என்பதனாய் பல மொழிகளில்

பல நாயகர்களுக்கு குரல் கொடுத்து இன்றும் அந்த நாயகர்களை வாழவைத்திருக்கும் பிண்ணனி மன்னனே!!


ஏன் இவ்வுலகிற்கு "நீ" என்று உன் குரலால் உணர்த்தி இன்று வானில் கரைந்துவிட்டாய்


புண்ணாகிய என் நெஞ்சிற்கு 

அமுதூட்டியது உன் குரலில் வரிகள்


ஆயிரம் நட்சத்திரம் வானில் உதித்தாலும் நிலவின் அழகிற்கு இணையேது?


எத்தனை ஆயிரம் குரல்கள் ஒலித்தாலும் உம் குரல் கொண்ட காந்தப்பாடல் எம்மை ஈர்த்தது ஏனோ???


நான் தனிமையை விரும்பியது உன் குரல் கேட்க

வலியை ஏற்றது உன் குரல் கேட்க


புண்பட்ட மனதை பூ கொண்டு துடைத்தது உம் குரலே.,


ஆயிரம் ஆயிரம் வார்த்தைமலர்களைத் தூவினாய் நீ அன்று 

அத்தனை நன்நெஞ்சங்களும் கண்ணீர் மலர்களை சிந்துகிறது இன்று


கலைஞனுக்கு ஓய்வில்லை எவ்வுலகிலும்?


கலைஞன் என்றால் படைக்க மட்டுமே என்பதை சுட்டிக்காட்டி இன்று வானுலகம் சென்றது உன் ஆன்மா.,


ஒரு நிமிட அழுகையால் துடைத்துவிட முடியாத உம் குரலின் நினைவுகள்

பல நூறு ஆண்டுகளுக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த உலகில்!


வருக்கும் இவ்வுலகம் நிரந்தரமல்ல என்பதை அறிந்தேன் உன் இறப்பாலே!!! 💐🙏🌱😞







4 கருத்துகள்:

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...