பிறப்பில் நாம் மனிதர்கள் உலகில் உயிரினங்கள் எல்லாம் இந்த பிறப்பை ஒரு வாய்ப்பாக எண்ணி சந்தோசங்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று வாழ ஆரம்பிக்கிறது.
"சந்தோசங்கள் மட்டுமே இவ்வாழ்க்கையில் இருந்தால் அத்தனை சந்தோசங்களும் மதிப்பிழந்துவிடும்"
வாழ்க்கைனா என்னப்பா?
பிறந்தோம்
வாழ்ந்தோம்
வளர்ந்தோம்
சிரித்தோம்
அழுதோம்
மாண்டோம் இவ்வளவுதானா வாழ்க்கை?
வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான் ஆனால் வாழ்நாள் என்பது ஒவ்வொரு உயிருக்கும் மாறுபடுகிறது
உலகில் வாழ வேண்டும் என்று நினைப்பவன் விரைவில் மாண்டுவிடுகிறான் உலகிற்கே ஒரு பாரமாக பாவங்களை மாட்டுமே சேர்ப்பவன் உலகில் நீண்ட ஆயுள் வாழ்கிறான்
என்ன இது இறைவனின் ஒரு படைப்பு தேவையானவர்களை எடுத்துவிட்டு தேவையற்றவர்களை உலகிற்கு அர்ப்பணிக்கிறான் இறைவன் என்ன காரணம்?? இதில் காரணம் ஒன்றுமில்லை இந்தவுலகம் இறைவனின் படைப்போ அல்லது அறிவியலின் படைப்போ அடுத்த நொடி உலகில் என்னில் உன்னில் என்ன மாற்றம் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது இது தான் இறைவனோ அறிவியலோ உலக உயிர்களுக்கு கொடுத்துள்ள ஒரு வித சவால்
அடுத்த நொடி என்னவென்பதே தெரியாமல் நான் வாழ்க்கை வாழ வேண்டும் எப்படி??? அடுத்து நான் நினைப்பது நடக்குமா என்று தெரியாமல் நான் தயாராக வேண்டும் எப்படி??
எல்லாம் அப்படிதான் நாளை நடக்கும், நாளை நான் உயிருடன் இருப்பேன் இதை நடத்துவேன் என்ற ஒரு நம்பிக்கை தான் நம்மை வழிநடத்துகிறது.,அந்த ஒரு நம்பிக்கையில் தான் இவ்வுலகம் ஓடிக்கொண்டிருக்கிறது
விலங்கினங்களின் வாழ்க்கை ஒரு உணவுச்சங்கிலி என்பது அனைவரும் அறிந்ததே அந்த உணவுச்சங்கிலியில் எந்த உயிரினம் எப்போது இன்னொரு உயிரினத்தின் வாழ்வாதாரத்திற்கு இறையாகும் என்பதை அறியாது சுற்றிக்கொண்டிருக்கும் அதற்கென ஒரு நேரம் வரும் போது தன் இறையை அவ்வுயிரினம் உண்டு தன் வளர்ச்சியை மேம்படுத்தும்
ஆனால் மனித இனம் விலங்கினங்கள் போன்ற உணவுச்சங்கிலி இல்லை என்றாலும் ஏதோஒரு விதத்தில் ஒரு மனிதனின் இழப்பு மற்றுமொரு மனிதனின் வளர்ச்சியை மேம்படுத்தும்
"ஒருவருடைய தோல்வி மற்றொருவருடைய வெற்றி"
"ஒருவருடைய அழுகை மற்றொருவருடைய சிரிப்பு"
"ஒருவருடைய இழப்பு ஒருவருடைய பிறப்பு"
"இது தான் மனிதர்களின் உணர்வுச்சங்கிலி"
ஆயிரம் பேர் கூடிய இடத்தில் ஆயிரம் பேரின் எண்ணமும் ஒன்றாகாது, ஆயிரம் விதத்தில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் அத்தனை எண்ணங்களுக்கும் ஒரே நேரத்தில் உணர்வு உயிரூட்டினால் அந்த இடம் போர்க்களமாகும்
ஆயிரம் எண்ணங்களில் ஒரே எண்ணம் மட்டுமே இறுதியில் வெல்லும் அந்த போரில் கடைசியில் நிற்பவனின் எண்ணம்.,
இந்த மனித பிறவியில் ஆறாம் அறிவானது ஒன்று உண்டு அது தான் விலங்குகளையும் மனிதனையும் வேறுபடுத்தி காட்டுகிறது அதுதான் ஒருவரை ஒருவர் புரிந்துணர்தல்.
"அறிவும் மனமும் வேறு"
அறிவால் விரைவில் முடிவெடுக்க முடியும் ஆனால் மனதால் மட்டுமே புரிந்துணர முடியும், புரிதல் இல்லாத முடிவு அர்த்தமற்ற முடிவாகும் எவருக்கும் பயனில்லாத முடிவாகும்
புரிதல் அற்ற முடிவானது எடுத்த பிறகு இழப்பிற்கு பிறகுதான் புரியும், சற்று முன் யோசித்திருந்தால் இழந்திருக்க மாட்டேன் என்று இப்படி எண்ணி வருந்தி பின் பயன் என்ன?? போனது திரும்ப வரவா போகிறது??
அத்தனை பெரிய மாமனிதர்களுக்கும் நமக்கும் உள்ள சில வித்தியாசங்களில் ஒன்று இந்த புரிதலுடன் கூடிய முடிவும் ஒன்றுதான் அனைத்து கோணங்களிலும் சிந்தித்து புரிதல் கொண்டு அந்த செயலை வெற்றியடைய செய்வதில் முக்கிய தேவை அனுபவம்
நாளை இருப்போமா? இறப்போமா? என்ற உறுதியற்ற உலகில் புரிதலற்ற முடிவால் மனதளவில் காயங்கள் ஏற்படுத்தி இருக்கும் வரை ஈருயிருக்கும் எந்த வித தொடர்புமற்ற ஒரு சூழ்நிலை உருவாக்குகிறது இந்த உலக வளர்ச்சி
நாளை என்ன என்று சிந்திக்கும் நாம் நாளை யாரோடு என்று சிந்திக்க மறக்கிறோம் வருபவரும் செல்பவரும் வாழ்க்கையில் சகஜமாகிவிட்டது எதனால் புரிதலற்ற முடிவுகள் இருப்பதனால்
பிறப்பு முதல் இறப்பு வரை எந்த ஒரு நபரும் நம்மோடு உலகில் பயணிப்பதில்லை ஒவ்வொரு உயிருக்கும் ஒரு முடிவான காலம் உண்டு
அக்காலம் எக்காலம் என்று சிந்தித்து சிந்தித்து காலத்தை கடத்துவதை விட்டு எக்காலமானாலும் அது என் காலம் என்ற நம்பிக்கையில் சமுத்துவ புரிதல் கொண்ட முடிவு எடுத்து இவ்வுலக அமைதியின் வளர்ச்சிக்கு வழி செய்வோம்!!!
"புரிதல் இல்லா ஒவ்வொரு முடிவும் உணர்வுசங்கிலியால் மனிதர்களின் உணர்வுகள் கொல்லப்பட்டுக்கொண்டு தான் இருக்கும்"🧐🤯🥴💐🌱



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக