சனி, 29 ஆகஸ்ட், 2020

"ஒரு தனி மனிதன் முயன்றால் எதையும் சாதிக்கலாம்"Vasanth & Co H.வசந்தகுமார் MP 👍💪🏻



வாழ்க்கையில் நான் சாதிப்பேன் என்ற வைராக்யம் எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் அதற்கும் ஒரு சில சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக அமைய வேண்டும் இல்லை என்றால் என்ன தான் நாம் செய்தாலும் முன்னேற்றம் என்பது எட்டகனியாகவே இருக்கும் 


அப்படி என்னத்தான் பிரச்சனை நமக்கு எல்லாம் சரியாகவே இருக்கு ஆனாலும் எதோ ஒரு விஷயத்தில் மட்டும் நம் செயலோ அல்லது முயற்சியோ முழுமையடையாமல் இருப்பதால் நம் செயலும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்ற குழப்பம்


எல்லாருக்கும் இருக்கும் குழப்பம் தான் அதற்கான விடையாக இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு வெற்றி சாம்ராஜ்யத்திற்கு சொந்தக்காரர், "வசந்த&Co" வின் உரிமையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.H.வசந்தகுமார் MP அவர்கள்...


பணம், பதவி இருந்து சாதிக்க நினைப்பவர்களுக்கு வரும் குழப்பம் வேறு எதுவுமே இல்லாமல் தேவையானதை உருவாக்கி சாதிக்க நினைப்பவர்கள் சந்திக்கும் குழப்பம் வேறு


1970களில் ஏழ்மை இளைஞன் பட்ட படிப்பு முடித்த இளைஞனின் 

கொள்கையில் ஒரு சுவாரசியம் இருக்கிறது


அந்த சுவாரசியமும், அவரது கொள்கையும் ஒரு மனிதனை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று இன்று உலகத்தில் பலரும் வியந்து பார்க்கக்கூடிய ஒரு உண்மை உழைப்பு


இருந்த வரை அவரது வாழ்க்கை வெளியே  வரவில்லை அவர் இறந்த பிறகு அவருடைய வாழ்க்கையின் மொத்த நினைவுகளும் இன்று உலகம் வியந்து பார்க்கிறது அந்த மனிதனை


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் பிடித்திருக்கும் என்பதையும் தாண்டி அவருடைய வளர்ச்சி பொதுவாக எல்லாரையும் சிந்திக்க வைத்துள்ளது 


யார் அந்த வசந்தகுமார்??


"ஒரு தனி மனிதன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்"


ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை மந்திரம் பிழைப்புத்தேடிய ஒரு வாலிபனின் வாழ்க்கை அவருடைய வாழ்க்கையில் ஒரே ஒரு முதலாளி மட்டும் தான் அடுத்து அவர் எடுத்த முடிவு நான் முதலாளி ஆக வேண்டும் என்று 


உலகில் எல்லோரும் நினப்பதுதான் நான் முதலாளி ஆக வேண்டும் என்று ஒரு பொதுவான எதிர்பார்ப்பு தான் ஆனாலும் அவரின் எதிர்பார்ப்பு சற்று வித்தியாசம் அந்த முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணம் சாதாரணமான எண்ணம் அல்ல உடலில் குருதியில் ஒன்றென ஊரிப்போன ஒரு எண்ணம், அதற்காக தனக்கான இருந்த நல்ல வேலையையும் விட்டு விலகி முதலில் ஒரு தொழில் துவங்கினார் இந்த இடத்தில் தான் அவரது தொழிலுக்கான ஒரு தூண்டுதல் விதை அவருக்குள் முளைத்தது அவரது நண்பர் அவரது கடையை வாடகைக்காக கொடுத்தது.,


அவர் வாழ்க்கையின் கனவான முதலாளித்துவத்திற்கான ஆரம்பம் அந்த கடையில் தான் உதயமானது ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அப்போதைக்கு கிடைத்த பொருட்களை வியாபாரம் செய்தார் அந்த பட்டதாரி வாலிபன்.


கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய தொழில் விருக்தியானது, காரணம் அவருக்கு தொழிலைத்தவிர வேறு எதுவும் தெரியாது 


அவருடைய கொள்கை "அவருடைய வாழ்க்கையில் ஒரே முதலாளி பிறகு நான் தான் முதலாளி"




அவருடைய ஆசை "விலை உயர்ந்த காரில் வந்து இறங்கும்போது தன்னுடைய கார் கதவை இன்னொருவர் திறந்துவிட வேண்டும்"


வாழ்க்கையின் திறவுகோள்

"ஒரு தனிமனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் இவ்வுலகில்"




"உலகில் அதிகமாக ஆசைப்படு நிச்சயம் அது கைக்கூடும் உண்மை உழைப்பு இருந்தால்" என்பது இவருடைய வாழ்க்கையில் உண்மையானது 


அரசியலில் ஆதிக்கம் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக கற்பனை செய்தவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராகவே வாழ்க்கையை முடித்துக்கொண்டார்…


எத்தனை முயற்சிகள்???


ஒரு சாதாரண இளைஞன் 40ஆண்டுகளில் ஒரு தனி விற்பனை சாம்ராஜ்யத்தை உருவாக்கி தன் நாட்டிலே ஒரு உயர் அரசு பதவியை பிடித்துள்ளார் என்றால் அந்த 40 ஆண்டுகாலம் அவருடைய உழைப்பு எப்படிபட்டதாக இருந்திருக்கும் அத்தனை உழைப்புக்கு உரிமையாளர் தான் திரு.H.வசந்த குமார் MP


ஒரு விற்பனைக்கடல், தனி சாம்ராஜ்யம், நாடாளுமன்ற உறுப்பினர், அத்தனை உயர் நிறுவனங்களுக்கும் ஒரு மிகச்சிறந்த போட்டியாக வலம் வந்த தமிழக தொழிலதிபர் இப்படி ஏகப்பட்ட வெற்றிகள் அதற்கு எத்தனை தோல்விகளை சந்தித்திருப்பார் இவர்?? நினைக்கையில் தலை சுற்றுகிறது

ஒன்றும் இல்லாமல் ஆரம்பமான ஒரு பொட்டிக்கடை இன்று தமிழகத்தில் மக்களின் பிரத்யேக விற்பனை நிலையமாக உருவெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது


அவருடைய வெற்றிக்கு காரணம் கனவுடன் கூடிய முயற்சி இதுதான் கனவு இதுதான் என் வாழ்க்கை என்று அடம்பிடித்து இத்தனை நாள் வாழ்க்கையை போராடி வென்று கொண்டிருந்திருக்கிறார் 


அவரது பிறப்பு ஒரு சாதாரண நிலை இறப்பு இன்று தமிழகமே அவரது வெற்றியை வியந்து பார்க்கிறது


வெற்றியாளர்களின் வெற்றியைவிட தோல்வியை படியுங்கள் நம் தோல்விகளுக்கான விடை கிடைக்கும்


வாழ்க வளமுடன்!!!👍💪🏻😉

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...