வாழ்க்கையில்
இதுவும் கடந்து போகும்
மனம் என்ற பெட்டிக்குள்
அடைக்கப்படுவதும், அடைபடுவதும் நம் எண்ணத்தின் வெளிபாடே!
வெற்றி என்று நினைத்தவுடன் வெற்றி வந்துவிடுவதில்லை
வெற்றிக்கான செயல்முறைகளையும் நல்ல எண்ணங்களாக மனதின் தோட்டத்தில் விதைத்தால்
பல இயற்கை இடர்பாடுகளாக செயற்கை தடைகளை கடந்து நம் வெற்றி முளைவிடும்
நேர் கொண்ட பார்வை,
திடமான மனம்,
நல்ல எண்ணம்,
சீறிய சிந்தனை,
மங்காத முயற்சி,
எதுவாயினும் சகிப்புத்தன்மை,
அன்பான அணுகல்
இப்படி பல தேவையான நல்ல செயல்பாடுகள் கொண்டே
வெற்றிக்கான பாதையை வடிவமைக்க வேண்டும்.
ஒரு வடிவமற்ற கல்
மற்றவரால் மிதிக்கப்படும்
வடிவம் கொண்ட சிலைக்கல் மற்றவரால் மதிக்கப்படும்
மதிப்பதற்கும், மிதிப்பதற்கும் உருவம் மட்டுமே வேறுபாடு
ஆனால் அந்த உருவம் உருவாக்க படும் இன்னல்களுக்கு கொடுக்கும் விலையே அந்த மதிப்பு!!
இதையும் கடந்து போ மனமே!!
உன்னை உரசி செல்லும் தடைகள் எல்லாம்
உன்னை செதுக்குவதில் தூசிகளாகத்தான் சரிகிறது
அந்த தூசிகளால் உன்னை இழந்துவிட்டாய் என்று அர்த்தம் கொள்ளாதே!
"நீ செதுக்கப்படுகிறாய்" என்று மனதில் கொள்!
நினைப்பது எல்லாம் நடந்தால் உலகில் வெற்றியின் சரித்திரங்கள் எழுதப்படாமலே போகும்!
ஒரே முறை பிறந்து...
ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் மனிதர்களும் உண்டு.,
நான் இதற்குத்தான் பிறந்தேன் என்று உலகிற்கு செயலால் சொல்லிய மனிதர்களும் உண்டு.,
ஒரு இடத்தில் தேவையானவர்களுக்கு சிறந்தவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் உலகம்.,
அந்த சிறந்தவர்களும் சிறியவர்களாக இருந்து வந்தவர்கள்தான் என்பதை உணர வேண்டும்!
சாதித்தவர்கள் சந்தித்த சோதனைகளுக்கு முன் சாதனைகள் எல்லாம் ஒரு பாகம் என்று உணர்ந்தால் புரியும்..,



Nice mapla
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குThank u mama