வெள்ளி, 13 நவம்பர், 2020

நாகரீக வளர்ச்சியில் களவு போகும் சந்தோசங்கள்!!!




உலகில் மனிதன் தோன்றிய விதம் என பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறது அதாவது விலங்குகளின் பரிணாம வளர்ச்சி எனவும், இறைவனின் படைப்பான ஆதாம்,ஏவாள் முதல் உயிர் எனவும், அறிவியல் கோட்பாடுகள் சில பல காரணங்களை முன்வைத்து தங்கள் கருத்துக்கள் மூலம்  விவாதங்களையும் நிகழ்த்தியுள்ளார்கள்... இறைவன், அறிவியல் இரண்டில் எது உண்மை என்று ஆராய்ந்து பார்க்கும் நிலை இன்றைய தலைமுறையில் இல்லை காரணம் அவ்வளவு பேரும் அம்புட்டு பிஸி அட என்னங்க அப்படி பிஸி என்றால் பிறந்த குழந்தை ஒரு இரண்டு மூன்று வயதில் தொழில்நுட்ப வளர்ச்சியால் Online Class அதாவது LKG கூட Online class என்ற முறையை கொடுத்து அவர்களையும் பிஸியாக உருவாக்கியுள்ளது இன்றைய தலைமுறை பாதிப்பு காரணம் ஏதோ ஒரு தொற்று.. உலகில் இயற்கையில் ஏதேனும் மாற்றம் என்றால் அதற்கு மனிதன் மட்டும் தான் காரணம்... குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை உலகில் நடந்த அத்தனை இயற்கை சீற்றங்களுக்கு மனிதனின் செயல்பாடு ஏதோ ஒரு வகையில் காரணமாக உள்ளது.. அதற்கான காரணங்களும் மனித நாகரீக வளர்ச்சி என்ற முறையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.., 

வளர்ச்சி தவறல்ல அதனால் என்ன பின்விளைவுகள் என்று சிந்திக்காத மனித வளர்ச்சி நம் எதிர்கால தலைமுறைக்கு தேவையா??? பள்ளி காலங்களில் ஓடி ஆடிய நாட்களில் இல்லாத வியாதிகள் நம் பிள்ளைகளில் தலைமுறையில் குழந்தை பருவத்திலே முளைக்க ஆரம்பித்துவிட்டது... 

எதை விதைத்தோமோ அது தான் முளைக்குமாம், நம் முன்னோர்கள் விதைத்த வழி முறையில் நாம் வாழ்கிறோம்., இந்த வாழ்க்கை முறை வலி என நினைத்து எதிர்கால சந்ததிக்கு வளர்ச்சி என்ற எண்ணத்தில் ஒரு விஷத்தை விதைக்கிறோம் என்று தெரியாமல் நாம் செய்யும் செயல் இன்னும் புரியாமல் இருக்கிறது நமக்கு... அத்தனை வளர்ச்சி சுகமான வாழ்க்கையை கொடுக்கும் சரி ஆனால் நிலையான வாழ்க்கையை கொடுக்குமா??? 90-100 வயதான மனிதனில் வாழ்க்கை சராசரி இன்று 40-50ஆகிவிட்டது... 60 வயதானால் உடலில் உள்ள  சத்துக்கள் எல்லாம் சக்கையாக பிழியப்பட்ட கரும்பை போல உடலும் எப்போது விழுமோ என்று காத்திருக்கிறது.. காரணம் உணவு முறை அரைகுறை வேகவைத்த உணவு... சமைத்து நான்கு நாட்கள் ஆன பிறகு சுவைக்கும் உணவு., Online Order என்ற பெயரில் சுவைக்காக உண்ணும் உணவு நம் உடலை சுவைக்க ஆரம்பிக்கிறது... 



முன்னேற்றப்பாதை என்ற நம்பிக்கையில் கடந்த கால பாரம்பரியத்தை மறக்க நினைக்கும் நாம் நம் எதிர்கால சந்ததியின் வாழ்நாள் பற்றி நினைக்க மறக்கிறோம்.

இந்த மாதிரியான முன்னேற்ற பாரம்பரிய மாற்றம்(மறதி) ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்பதே., இந்த மாற்றம் நம் தாயகம் முழுவதும் பரவி விட்டது.,இதை மாற்ற என்ன செய்ய வேண்டும் நினைப்பது மட்டும்தான் மாற்றம் என்பதை மற்றவரிடம் மட்டுமே நாம் எதிர்பார்க்கிறோம் நம்மிடம் தவிர... அடுத்தவன் மாறினால் உலகம் மாறிவிடும் என்று அடுத்தவனையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஆனால் நாம் மாறினால் மட்டுமே நம் வீடு மாறும் என்ற ஒரு எண்ணம் கூட இல்லாத முட்டாள்களாக நாம் இருக்கிறோம்...(அரசியலிலும் கூட🥴)..

எப்போது புரிதல் என்ற வார்த்தைக்கு சுய புரிதல் உணர்கிறோமோ அப்போது தான் மாற்றமும் சுய மாற்றத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது என்று உணர்வோம்!!! நாகரீக வளர்ச்சி உணவு உடை மற்றும் இருப்பிடம் இப்படி அத்தியாவசிய வளர்ச்சி(மாற்றம் மட்டுமே) தான் முதல் வளர்ச்சி என்ற மூட நம்பிக்கையில் நம் எதிர்காலத்தையே பாதாள குழியில் தள்ளிவிடுகிறோம் என்று உணர்வதில்லை இன்றைய தலைமுறை... உணவில் வளர்ச்சி(வெந்தும் வேகாததுமான உணவு), உடையில் வளர்ச்சி(உடல் மறைத்து மானம் காத்தவன் இன்று உடலை(கவர்ச்சி) காட்டி தன் பெயரை நிலைநாட்ட நினைக்கிறோம், இருப்பிட வளர்ச்சி(இயற்க்கைக்கு போட்டியாக இருப்பிடம் அமைப்பது)இப்படிப்பட்ட அத்தியாவசிய வளர்ச்சி தேவையா? சரி இந்த நாகரீக வளர்ச்சியால் அழிவது நமக்கு மட்டும் தன் விளம்பரம், ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் நம் அழிவை நாம் தீர்மானித்தது போக அடுத்தவன் தீர்மானித்து நம் எதிர் காலத்தை அழிப்பது என்பது தான் நம்ப முடியாத ஒரு அதிர்ச்சி.,

இதை யாரும் அறியாமல் இல்லை தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்றால் நம் அந்தரங்கம் அத்தனையும் உலகமே பார்க்கும் அளவிற்கு வளர்ச்சி சற்றும் முகம் சுழிக்கும் விஷயம் தான் ஆனால் அது தான் உண்மை., தொழில்நுட்ப வளர்ச்சியில் கொடிகட்டி பறக்கும் ஒரு எமன் இந்த  சமூக வலைதளங்கள்.,



அளவுக்கு மீறனால் அமுதமும் நஞ்சு இது உணவிற்கும் பொருந்தும் உணர்விற்கும் பொருந்தும் 20 ஆம் நூற்றாண்டில் இயற்க்கைக்கு எதிரான போராட்டத்தில் பிறந்த உயிர்களை விட இறந்த உயிர்கள் தான் அதிகம் அதுபோல தொழில்நுட்ப வளர்ச்சியால்இறந்த உயிர்களை விட உணர்வுகளை இழந்தவர்களே அதிகம்... எத்தனை புகைப்படங்கள், எத்தனை வீடியோக்கள் இதெல்லாம் பெருமை என நினைத்து நம் மானத்தையே விற்கும் நிலையமாக மாறுயிருக்கிறது சமூக வலைதளங்கள்., அதனை பயபடுத்துபவர்களுக்கு பொழுதுபோக்கு என்ற எண்ணத்தில் தன் முழு வாழ்வின் போக்கையும் மாற்றிவிடுகிறார்கள் அதனால் பயன் ஆயிரம் இருந்தும் அதனால் வளைவுகளை நோக்கியே நம் செயல்பாடுகள் அரங்கேறுகிறது சமூக வளைதளங்களில்.

எதையும் பயன்படுத்தும் முன் நம் காலம் குறுகியது நம் பயன் பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும், பொழுதுபோக்கு என்ற நோக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியால் நமக்கே எமனாகும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும்.. நம் முன்னோர்கள் பின்பற்றிய நாகரீகம் தான் நம் எதிர்காலத்தை காக்கும் என்ற உணர்வை வளர்க்க வேண்டும்., மாற்றம் என்பது உன்னில் தொடங்கு நம் எதிர்காலமும் மாறும் அடுத்த சந்ததியின் வாழ்நாளும் மாறும்.. சமூகவலைதளங்கள் சிந்திக்க பல உண்டு, பொழுதுபோக்கு எனும் ஒரு  தேவை நம் வாழ்க்கைக்கு தேவை இல்லாததையும் நம்மிடம் கொண்டு சேர்க்கும் என்பதை உணருவோம்.



ஒரு காலத்தில் கைப்பேசி எல்லாம் பிள்ளைகளின் வாழ்வை கெடுக்கும் என்ற எண்ணம் போய் இனி கைப்பேசி இல்லை என்றால் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் இல்லை என்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் அன்பு பெற்றோர்களே கைப்பேசி, இணையதளம் வேண்டாம் என்ற போதே குழந்தைகள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டிற்காக இணையதளத்தில் மூழ்கி இருப்பார்கள் ஆனால் இப்பொழுது கைப்பேசி தான் கல்விக்கான தேவை என்ற நிலையில் குழந்தைகளை இணையதளம் மற்றும் கைப்பேசிக்கு அடிமையாகாமல் காப்போம்.. நாகரீக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி எப்போது மனிதனில் வாழ்நாள் , உடல் மற்றும் மன பாதிப்பு இல்லாமல் வளர்கிறதோ அப்போது தான் உண்மையான வளர்ச்சி.

1 கருத்து:

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...